நாம் அன்றாட சமையலில் தக்காளி முக்கிய பங்கினை வகிக்கக்கூடியது. மிக குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடிய தக்காளி அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
தக்காளியை எப்படி வேண்டுமானாலும் நமது உணவில் சேர்த்து கொள்ளலாம். இதனால் அதன் மருத்துவ பயன்கள் அப்படியே நம்மை வந்து சேரும்
தக்காளியினை நம் உணவில் சேர்த்து கொள்வதால் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை கூட தவிர்க்க முடியும்.
தக்காளியில் காணப்படும் லைகோபீன் என்னும் நிறமியானது அதன் சிவப்பு நிறத்திற்கு காரணமாகும். இந்த லைகோபீன் புற்றுநோய் உண்டாகாமல் தடுக்கும் தன்மையினை உடையது.
இது உடலில் உள்ள நச்சினை வெளியேற்றி புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும்.
மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் விரைவில் சருமம் முதிர்ச்சி அடையாமல் தடுக்கிறது.
புரோஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் தக்காளியினை சாப்பிட்டு வந்தால் நோயின் தீவிரம் குறையும்
வாரம் ஒன்றரை கிலோ தக்காளியினை உணவில் சேர்த்து கொள்பவர்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்ப்பு 20சதவீதம் குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்கள் உணவில் அதிகமாக தக்காளியினை சேர்த்து கொள்வதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பபை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றை தடுக்கலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக